Monday 21 July 2014

சதுரங்க வேட்டை சினிமா விமர்சனம்

கொமாரபாளையம் லட்சுமி தியேட்டரில் ரீலீஸ் 18-07-2014

கோலிசோடா படத்தில் உதிவி இயக்குநராக பணிபுரிந்த வினோத் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயாகனாக நட்ராஜ்(நட்டி) அவர்களும் கதாநாயகியாக மலையாள வரவு இஷாராவும் மற்றும் இளவரசு, வளவன், பொண்வண்ணன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரபல இயக்குநர், நடிகர் மனோ பாலா அவாகள் தயாரித்திருக்கிறார். டைரக்டர் லிங்குசாமி அவர்கள் தனது திருப்பதி பிரதர்ஸ் பேனரில் படத்தை வாங்கி விநியோகம் செய்துள்ளார்.

கதை - சமீபத்தில் நாம் பத்திரிக்கையில் படித்து படித்தும் மீண்டும் மீண்டும் ஏமாந்து கொண்டிருக்கிற பல வகையான மோசடிகள் எவ்வாறு செய்கிறார்கள் அதை செய்யும் ஹீரோ அதிலிருந்து எப்படி தப்பிக்கிறான் அவனால் ஏமாந்தவர்கள் அவனை என்ன செய்தார்கள் அதிலிருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான் என்பதே கதை.

திரைக்கதை - 6 வகையான மோசடி அதன் தலப்பிலேயே பின்னப்பட்ட திரைக்கதை என படம் ஜிவ்வென்று ஸ்பீடு எடுத்து பறக்கிறது. MLM பிஸ்னஸ் பற்றி வரும் காட்சிகளில் அதைப்பற்றி தெரிந்தவர்கள் தட்டும் கைத்தட்டலை விட அதில் சேர்ந்து ஏமாந்தவர்கள் தட்டும் கைத்தட்டுகளே அதிகம்  கேட்கிறது. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தால் போல் கடையில் அந்த ரைஸ் புல்லிங் மோசடி காட்சிகள் அருமை

வசனம் - “ நான் ஜனங்கள ஏமாத்தள ஏமாற தயார இருந்தவங்களுக்கு நான் ஒரு வாய்ப்பு கொடுத்தேன் அவங்வளவுதான் இதை போய் மோசடின்னு சொல்றீங்களே ” - “ ஒருத்தன் நம்பள ஏமாத்திட்ட அவன நாம எதிரியா பாக்க கூடாது அவனை நாம நம்ம குருவா நினைச்சி வாழ்கையில முன்னேற்ற வழிய மட்டும்தான் பாக்கனும் ” என்று படம் முழுவதும் வசனங்கள் பட்டாசாய் வெடிக்கின்றன

இயக்கம் - முதல் பட இயக்குநருக்குண்டா ஜெயிக் வேண்டும் என்ற வெறி வினோத்தி்டம் நிறைய இருக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் ஆராய்ந்து அதை காட்சிப் படுத்திய விதத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.

நட்ராஜ் - அசால்டா இவர் செய்த கேரக்டர் படத்தின் ஜீவநாடியே இவர் நடிப்பில் துக்கி நிறுத்திவிட்டார்

வெற்றி பயணத்துடன் தொடங்கியிருக்கும் டைரக்டர் வினோத்திற்கும் தயாரிப்பாளர் மனோ பாலாவிற்கும் வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment